Wednesday, September 28, 2011

நுறையீரலின் குரல்!

பிறக்கையில் வெள்ளையாம் நான்
அம்மா சொல்லி ஞாபகம்
பல வருடம் கடந்து
ஊர் திரும்பினேன்

"என்னடா கண்ணா
ரொம்ப கருத்துட்ட
சென்னையில வெயில்
அதிகம் போல"

..என அனைவரின்
விசாரணை
ஊரில்!

வீட்டிற்குள் நுழைந்ததும்
கண்ணாடி பார்த்தேன்
முதன் முறையாய் காண்பது போல்!

ஏளனமாய் ஓர் குரல்...

"கருத்துவிட்டாயோ!
என கவலையா??

நீ புகை பிடித்து

கரியை எனக்கு பூசி

கரித்துண்டுகளை எனக்கு
உணவாய் அளித்து

கருப்பன்னனாய்
என்னை மாற்றி

உன் நிறம் கருத்ததுவோ??
என இன்று ஆராய்ச்சி!

கொண்டாட்டமோ, துக்கமோ
என்னை வருத்துகிறாய்!
பின்னர் நீயும் உன்னைச் சார்ந்தோரும்
வருந்துவீர் என மறந்து!!"

 

Tuesday, September 27, 2011

ஓடி விளையாடு பாப்பா!

விளையாட்டிற்கு வயதில்லை
வயதாகியதால் விளையாடுவதில்லை
என முதியோர் வாக்கு
உண்மையா??

விளையாடிப்பார்!
வயதாவதே அறியாதிருப்பாய்
மனதளவிலும்
உடல் அளவிலும்!

விளையாடுகையில்
வியர்வை வெளியேறும்
முதுமையோடும், சில பல
வியாதிகளோடும்!

இளமையும், உடல்
நலனும் விளையாட்டுடன்
ஒப்பந்தம் செய்தனவோ??

விளையாட விளையாட
குதூகலமாய், நம்முள்
குடிகொண்டிருக்கின்றன!!

விளையாடுவோம்!
இளமையோடும்
உடல் நலத்தோடும்
பல்லாண்டு வாழ்ந்திவோம்!!

Tuesday, September 20, 2011

நேற்று இன்று நாளை!!

நேற்று இன்று நாளை
காலத்தின் பிரிவினை
ஒன்றிலும் ஒருவராலும்
உறுதியாக வாழ இயலாத ஓர் நிலை!

நேற்றுக்குள் நுழைவாயில் இல்லை
நாளைக்குள் செல்லும் வாகனம் இல்லை!

இன்றைக்குள் இருக்கின்றோம்...

நேற்றின் நுழைவாயிலை ஆராய்ந்து
நாளைக்குள் செல்லும் வாகனத்தை உருவாக்கிக்கொண்டு

இன்றைய இலவச வீட்டை விட்டு
வெளியே!!

Friday, September 16, 2011

Road to Wonderland!

A long road
With bushes around
Thorns on the ground
Wonderland at its end

If opted to fly
I was lost in a maze
As bushes covered
The wonderland

To reach there
Is to walk on thorns
But no sandals
To guard!

Blood stains on thorns
Torn dresses on bushes
None around to guide
None to walk along

Ought to opt
To revert back
At a glance of thorns
OR Move Ahead!!

Cheerful voices, Sing merrily
In the wonderland
Sighing their source
Where I stand

Ought to opt
To move ahead
Safe With plans
Or Revert Back!!

Took my first step
Before thoughts invade
Second followed
Midway I crossed

Walking on the rim of the road
Balancing not to scratch on bushes
Or to step on thorns
Here I am in the midway!

A glance of success
Ran before
Opening the doors of dream
Drowning me within

Took a leap
With spots of blood
As I was pushed by the bushes
Stamping on thorns
Dreams on the journey
Harms us unlike vision
That guides us and
Balances our walks!

Struggles gave me pain with gain
Vision kept me intact
Wonderland kept me going
Songs drove me steadily

Here I am
Singing along
Merrily in Wonderland
Soothed the Pain of travel!!

Thursday, September 15, 2011

சாதனை!

துணையின்றி உன் சிறு உடல் திருப்பி
குப்புற கவிழ்ந்தாய், குழந்தையாய்
உற்சாகம் சூழ, உன்
முதல் சாதனை!

முட்டியிட்டு தவழ்ந்து
கை ஊன்றி தனித்து நின்றிட
மகிழ்ச்சி பொங்கும், உன்
இரண்டாம் சாதனை!

ஓட ஆரம்பித்ததும், வார்த்தைகளை
உச்சரிக்க தொடங்கியதும்
பிறரை சார்ந்த வாழ்க்கை
தொடங்கியதோ?

தனிச்சையான சாதனை
மறைந்ததோ?
மறந்ததோ??

நீ ஓட, வாழ்க்கையும் ஓட
வாழ்க்கையோட நீ ஓடுகின்றாய்
பிறருக்காக, பிறரை சார்ந்த உன்
சாதனைக்காக!

சற்றே நில்!
உன்னுள் கவனி!
உன் திறமை கொண்டு செல்!
ஓவ்வொரு அடியும், உன் சாதனைப்படியே!!

பிறர் துனையின்றி...
குழந்தையாய் சாதித்தாய்!

குமரனாய் சாதிப்பாய்,
வாலிபனாய் சாதிப்பாய்,
முதுமையிலும் சாதிப்பாய்!
வாழ்க்கை உன் கையில்!!


 

Wednesday, September 14, 2011

மாற்றம் - சிந்திப்போம்!!

காகித பூவும் அலங்கரிக்கும்
காய்ந்த மலரோ குப்பையில்!

மெழுகு பொம்மையும் வரவேற்கும்
கைம்பெண்ணோ மூலையில்!

காலப்போக்கில்...

குப்பையும் பயனாக
மறுமணங்கள் வரவேற்கப்பட
முன்னேற்றம்!

ஆனால்....

நேற்றைய இளமை, இன்றைய முதுமை
மாறாமல் அதிகரிக்கின்றன
முதியோர் இல்லம்!!

Tuesday, September 13, 2011

கனவு!

அடர்ந்த காட்டுக்குள்
ஆழ்ந்த இருளுக்குள்
தேடல்
ஒளிக்காக!

நிழலாய் உருவங்கள்
நிஜம் என திரையில்!

சிரிக்கின்றோம், அழுகின்றோம்
மிரளுகின்றோம், மிரட்டுகின்றோம்!

காதலில் வீழ்கின்றோம்
வீழ்ந்த காதலால் வருந்துகின்றோம்!

புதிய வரவை, புதிய உறவை
வரவேற்கின்றோம்!

உயிரின் பிரிவை, உறவின் முடிவை
பிரிந்த பின் உறவுகளின் உணர்வை உணருகின்றோம்!

வாழ்க்கையை வாழ்ந்து, வீழ்ந்து
விழிக்கின்றோம்!

திரையில் கண்டதை நினைத்து, மறந்து
தொடருகின்றோம் நிஜத்தில்!

தினம் ஓர் படம் இலவசமாய், முடிகிறது
விடியலில்!!

 

Monday, September 12, 2011

நீர் - தேகம்

நீர் குடத்தில் தத்தளித்து
மழை நீரால் உயிர் வாழ்ந்து
அன்பு எனும் பன்னீரில் குளித்து
வெறுமை எனும் வெந்நீரில் வெந்து
கண்ணீரில் கரைந்து
கடல் நீரில் கரை சேரும்
நம் தேகம்!!

தாய்!!

அழுகின்ற பிள்ளை
கிளுகிளுப்பு தந்தை கையில்
பால் புட்டி பாட்டி கையில்
கை தட்டல், தாத்தா எழுப்பும் ஓசை

கண்ணீரும் வற்றவில்லை!
அழும் ஓசை ஓயவில்லை!!

அவள் நுழைந்தாள்
அவன் பார்வை அவள் பக்கம்
அவள் களைப்பும் ஓய்ந்தது
அவன் அழுகையோடு!!

Thursday, September 8, 2011

பேராசை!

வானை பார்த்த மரம்
பறக்கும் ஆசையுடன்
கழுத்தை நீட்ட
வெட்டினான் விறகுக்காக

விறகிலிருந்து ஒலிந்து மறைந்து
வெளியேற, உள்ளேறியது
காகித ஆலை செல்லும்
லாரியில்

காகித உற்பத்தி ஆலையில்
நொறுங்கி, உருக்குலைந்து
பொடியாகி, கலவையுடன் கலந்து
காகிதமானது

காகிதம் காத்தாடியாக
பறக்கும் நிறைவுடன்
வானில் ஆனந்தமாய்
மரத்தை ஏளனம் செய்ய...

மரங்களின் கோபத்துக்குள்ளாகி
பலத்த காற்றில்,
மரக்கிளையில் சிக்கி
உருக்குளைந்து மடிய...

காத்தாடியை உயர்த்திய பிள்ளை
மற்றொரு காத்தாடியுடன்
ஆனந்தமாய்!!

அருகே...

ஓர் மரம் நீரின்றி மடியும் வேளை
சிறு பிள்ளை அன்போடு
நீரூற்றி உயிரளித்தான்!!

Wednesday, September 7, 2011

பயணம்!!

நிலையற்ற வாழ்க்கையை
நிலையாக்கும் கற்பனையில்
காலத்தை கடக்கும் வேகத்தில்
சறுக்குகின்றோம்!

நடக்கவில்லை, ஓடவில்லை
சறுக்குகின்றோம்!

அவ்வப்பொழுது நம்பிக்கை எனும்
உந்துதல் கொண்டு
அதிகரிக்கின்றோம்
வேகத்தை!

விதியின் பனிமலை
நம் வேகத்தால் கரைந்து
அலையாய் பின் தொடர்வதை
மறந்து, உணர்ந்தும் உணராது
சறுக்குகின்றோம்!

பனி மலையில் பயணம்
பனிப்பாறையை நோக்கி - எனிலும்
பாறையும் கரையும், மறையும்
நீராய் மாறும்!

நீரில் தொடங்கி, நீரில் முடியும்
நம் பயணத்தில்
நம் கையில் தொடக்கமும் இல்லை
முடிவும் இல்லை!

நடு நிலையில் - தடுமாறிய சறுக்கலில்
திடமான நடையை மறந்து
எதை நிலையாக்க
இந்த பயணம்??

Monday, August 29, 2011

நான் யார்?

நான் யார்?
என்று என்னை கேட்டேன்

வெந்நீரில் தவழ்ந்து
அவள் எச்சில் உணவை உண்டு
அவள் சுவாசத்தை சுவாசித்து
கண்ணீரில் பிறந்தேன்!
நான் யார்?
பூச்சியா? பறவையா? மிருகமா? மனிதனா?
அச்சமின்றி நான் வளர்ந்தேன்
அவள் அச்சுறுத்தலில் அஞ்சினேன்
பேதமறிந்தேன்!
நான் யார்?

பருகும் பால் அன்றி
ஆண்பால் பெண்பால் பேதமின்றி
விளையாட, அவள் பார்வையால்
பிரிவு உணர்ந்தேன்!
நான் யார்?

படர்ந்த வானில் சிறகை விரித்து,
நிலவை பிடிக்க பறக்கையில்,
திருமணக் கயிற்றில் என்னை பூட்ட,
குடும்பச் சுமை சுமக்கின்றேன்!
நான் யார்?

என் எச்சில் உணவை அவன் உண்டு
என் சுவாசத்தை சுவாசித்து
என்  தொப்புள் கொடியில் இணைந்து 
அவன் பிறக்க..

மற்றொரு பிறவி
இன்னும் ஒரு கேள்வி
நான் யார்?
அவன் யார்?

பந்தத்தில் அகப்பட்டு
பாசத்தில் பிணைந்து
காதலில்   கரைந்து
காலத்தோடு போராடி
தன்னையே மறந்தேன்!
நான் யார்?

Thursday, August 11, 2011

சுதந்திரம்

தன் உழைப்பில் கர்வம் கொண்டு
தாய் மண்ணை தெய்வம் ஆக்கி
தன் நலம் இன்றி, பிறர் நலம் கருதி
யாவறையும் குடும்பத்தினறாய் பாவித்த
இந்தியருக்குள்...

பேராசை விதைவித்து
வெளிதேசம் மோகமளித்து,
சிறிது சிறிதாய் உள்புகுந்த
புத்தீசல் அந்நியர்கள்

நிலம் கொண்டு, பணம் கொண்டு
இரட்டிப்பின் பெயரில்
போதையேற்றி, உயிர் கொண்ட நண்பர்கள்
அதற்கு தோள் கொடுத்த எட்டையர்கள்

போதையின் உச்சியில், மிதக்கின்ற அந்நிலையில்
தடுமாறிய பேதைகள்,
உருமாறி விழித்தெழுந்தார்
போராளிகளாய்!

வருங்காளம் விழித்திருக்க
சந்ததியர் தழைத்திருக்க, நம் நாடு
முன் போல் செழித்திருக்க, அவதரித்தார்
தியாகிகளாய்!

போராட்ட உச்சியில், ஒற்றுமையின் வலுமையில்
அந்நியர்கள் தெரித்தோட
ஆட்கொண்டோம் சுதந்திரத்தை
ஆகஸ்ட் 15 1947ல்

நம்மை விட்டுச்சென்ற அந்நியர்கள்
நம்மிடம் விட்டுச் சென்றார்
பேராசையை, வெளிதேச மோகத்தை
மது மாது எனும் புத்தீசல்களை...

சுதந்திரம் அடைந்தோமடி
அந்நியரின் ஆக்கத்திலிருந்து
என்று அடைவோமோ
அவர்கல் விட்டுச் சென்ற தாக்கத்திலிருந்து??

சிந்திப்போம்!!
இன்னும் ஒரு ஆகஸ்ட் 15 தேவையா???

 

Loneliness

Far away from
Fun, Frolic and Felicitation
Miles Apart
In to the solo land

Green World, Blues Surround
Lights Invade
My Eyes are closed
And so my Mind

In the Wonderland
I stand Blind!!


Tuesday, May 31, 2011

Move Ahead!!

On the air
Up in the sky
It’s a take off
After the long run

Doubled the speed
Raised the wings
On the flight
Lifted from the ground

Troubles seen large
Reduced in size
As I flew
High on sky

Mountains and its rifts
Scanned through the holes
High above
Clouds on the show

Feast to the eyes
Far apart
It’s a mist
Blocking the way nearby

Fear not,
For Victory stays
On the hurdles fray
Move Ahead!!

Wednesday, March 23, 2011

Wait

Waited for 10 months
In the womb
To be special
And see wonders of life

Waited for a year
To walk and run
T o attract attention
And enjoy the wonders of life

Waited for 5 years
To join a group
To learn alphabets
And taste the wonders of life

Waited for 15 years
To grow and learn
The facts of life
And enjoy the teens of life

Waited for 25 years
To hold the hand
Of my beloved
To cross the rest of life

Waited
all the years through
And
Continue to wait
In coming moments too

As wait thrills
And brings
Everlasting Joy
In the swings of our life!!




கவிதை

கவிதை யாதென
குழம்பிப் போனேன்

கவிதை எழுதிட
துடிப்பு கொண்டேன்

துடுப்பாய்
பேனா

கப்பளாய்
காகிதம்

கடலாய்
சிந்தனை

வார்த்தை
கோர்த்தேன்

எழுத
தொடங்கினேன்

எழுதியது
என் துடுப்பு
துடிப்பில்லாமல்

வியந்தேன்!!

உறைத்தேன்
என் வருத்தத்தை
தோழியிடம்

உணர்ந்தேன்

மொழி இல்லாத
உணர்வுக்கு
உயிரளித்து
ஓசையெழுப்பச்
செய்வதே
கவிதையென்று!!

சுனாமி


பூவுக்குள் பூகம்பம்
வண்டுகளின் வண்முறையால்
தேனுக்குள் கடல் சீற்றம்
தேன் உறியும் பூச்சிகளாள்

தோட்டத்தின் குமுறல்கள்
வாண் பிளந்தும்
தோட்டக்காரன் செவுடன்

வண்டுகளும் பூச்சிகளும்
வட்டமிட்டு கூத்தாட
தோட்டகாரன் குருடன்

உப்பான கன்னீர் துளி
சொட்டு சொட்டாய் பெருகிட
சுனாமியின் அறிகுரி
வெகு தெளிவாய் தெறியுதடி!!

Tuesday, March 8, 2011

Happy Women's Day 2011

சிட்டுக் குருவியென சிங்காரமாய்
ரீங்காரம் போட்டு
தோகை விரித்தாடும் மயிலெனவாய்
வலம் வந்து
சிந்தனை சிற்பிகளாய்,
ஓவியக் காவியமாய்,
சரித்திரத்தில் நிலைத்திருக்கும்
பெண்மணிச் செல்வங்களே!!
 
பிறக்கையிலே பெண் என்று
முகம் சுளித்த உறவினரோ, நாம்
நடக்கையிலே பெண் என்று
சுமை கொடுத்த சான்றோரோ
தடுமாறும் தருணத்தில்
தோள் கொடுத்து உயர்த்திடுவோம்
 
கண்ணுக்கு மை பூசி
கண்ணீரை மறைக்கின்றோம்
மருதாணி கையில் கொண்டு
கை வெடிப்பை பூசுகின்றோம்
 
மகளாய், மனைவியாய்
தாயாய், தலைவியாய்
பல ரூபம் கொண்டும்
பெண்ணாய் பெண்மைக்கு
கிரீடம் சூடும் பொறுமையால்
உருகொண்டு,
சாதிக்க பிறந்துள்ளோம்!!
 
சிறகடித்து பறக்கின்ற சிட்டுக்களாய்
விண்ணுக்கும் பாதை வகுப்போம்
அழகினை பறைசாற்றும் ஓவியமாய்
அழகுக்கோர் வடிவமைப்போம்
 
புன்-னகை உடுத்தி
கண்ணில் மென்-மை பொருத்தி
செயலில் தன்மை கொண்டு
பெண்மையை பறைசாற்றி
பல சாதனையை புரிந்திடுவோம்
பெண்டீரே வாரீர்!!!
 
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!!

Thursday, March 3, 2011

கணிணி - காதலி

உன் முதல் பார்வையிலே
என்னை தொலைத்தேன்
உன்னை தழுவிட
நெஞ்சம் துடித்தேன்
கை விரல் விளையாட்டில்
என்னை மறந்தேன்
நான் எண்ணியதெல்லாம்
நீ எனக்களித்திட
உள்ளம் நெகிழ்ந்தேன்

நொடிகள் கடந்தன,
நாட்கள் கடந்தன
வருடம் கடந்தன
நானும் நீயும்
நம்முள் பிரியா உறவும்..

உன்னை பற்றியதில்
என்னை பற்றியது
செல்வம், ஆடை, ஆபரணம்
நிலம், மனை,
மற்றும் பற்பல பொருள்கள்

உன் மோகத்தில்,
மறந்தேன்..

என் கை விரல் பற்றி
நடை பழக்கிய என் தந்தையை!

தன் உடல் சுமை கூட தாளாத வயதில்
என் புத்தகச் சுமையை தான் சுமந்து
என்னை பள்ளிக்கு அழைத்து சென்ற தாத்தாவை!

ஓய்வில்லா கண்கள் ஓய்வுக்கு ஏங்கும் பொழுதும்
எனக்காய் ஒரு குட்டி கதை கூறி
அதில் ஓர் வழிகாட்டி, என்னை உறங்க வைத்த பின்
தான் உறங்கிய பாட்டியை!

பள்ளி பருவம் முதல்,
கல்லூரி பருவம் வரை
என்னுடன், என் கனவுடன், என் மகிழ்வுடன், என் சோர்வுடன்
கலந்து, பகிர்ந்து, என்னை தன் தோள் சாய்த்து, எனை உயர்த்திய
என் உயிர்த்தோழர்களை!

வெயிலிலும் மழை காட்டி
சுட்டெரிக்கும் நெருப்பிலும் குளிரூட்டி
என்னையே உரு மாற்றி,
என் உயர்வுக்கு வழி காட்டி
காதலில் கரைந்து
எனக்காய் புது உலகம் புதுப்பித்த
என் அங்கமாய் என்னுள் வசிக்கின்ற என் மனைவியை!

கண் விழித்த நாள் முதல்
எனக்களித்து, தான் உண்டு
என்னுடன் விளையாடி
என்னுடன் தான் பயின்று
இரவு பகல் பாராது
எனக்காய், எனக்கு மட்டுமாய்
உழைத்து, களைத்து, கரைந்து
இன்னும் எனக்காய் காத்திருந்து
மாறாத புன்னகையோடு
நள்ளிரவில் "சாப்பிட்டாயா கண்ணா?"
என நலம் விசாரிக்கும்
எனக்குயிர் அளித்த
என் அன்னையை!

இவை அனைத்தையும்
மறக்க செய்தாயே..

காதலியே - கணிணியே!!

உன் காதலால்
உயிரில்லா செல்வத்தை பெற்றெடுத்தேன்
பல உயிருள்ள நேசத்தின் மரணத்தில்!!!

 

Monday, February 21, 2011

வாழ்க்கை

நேற்று இருந்தவன்
இன்று இல்லை
முந்நொடியில் இருந்தவன்
இந்நொடியில் இல்லை

இது கனவில்லை
நிஜம்
நம் வாழ்வின்
உண்மையான முகம்!!

ஸ்திரமில்லா வாழ்வில்..
நீயா நானா போட்டி

தடுக்கி தடுக்கி
தடுமாறும் பாதை

போதையில்லாமலே தள்ளாடும்
சிந்தனைச் சிற்பிகள்

எண்ணெயில்லாமலே பொறியும்
பொறாமைச் சொற்கள்

காலத்தை வென்றார் போல்
மன்னாதி மன்னர்கள்

சிரிப்பை தொலைத்து,
பணத்தை தேடி
காலத்தை கழித்து
நோயை கூட்டி
கணக்கில்லாமல் ஓடுகின்றோம் கணக்கில்!!

இனிமை, மென்மை, தன்மை, பொறுமை
இவைகளுக்கு வெறுமை பூசி
தனிமையில் தவிக்கின்றோம்

இனியேனும் உணர்வோம்...

புன்னகையில் குளித்தெழுந்து
ஓற்றுமையை நாம் அணிந்து
ஒவ்வொரு நொடியையும்
ரசித்து, ருசித்து, மகிழ்வோமெனில்
சொர்க்கம் நம் வாழ்வில் தான்!!

 

Monday, January 10, 2011

Internet

Hi என்று அழைத்து
Hello என்று அறிமுகமாகி
How are you என நலம் விசாரணையில்
தொடங்குகின்றது..
இரயில் ஸ்நேகம் இல்லை
Internet ஸ்நேகம்!!

முகம் அறியா மனிதர்கள்
அறிந்தார்ப்போல் முகத்திரைகள்
சின்னத்திரை தோற்று விடும்
வெள்ளித்திரை மறந்து விடும்
Internetன் ஜன்னலில்
கவிதை பரிமாற்றங்கள்!!

என்னென்று கூற விஞ்ஞானத்தின் ஆற்றலை!!

வியாபாரமா? சேவையா??
தொலைந்த நட்பா? உறவுகளா?
புதிய தொடர்புகளா??
கூவி கூவி ஒரே கூச்சல்
Internet சந்தையில்...

காசு கொடுத்து தொலைக்கவில்லை
நேரத்தை தொலைக்கின்றோம்
போதை ஊசி இல்லை
போதையில் ஊறிவிட்டோம்!!

Internet  - மருந்தாய் உபயோகித்தால்
நமக்கு நல்லது
அதுவே அதிகரித்தால்...

அமிர்தமும் விஷமல்லவா??