Wednesday, March 23, 2011

கவிதை

கவிதை யாதென
குழம்பிப் போனேன்

கவிதை எழுதிட
துடிப்பு கொண்டேன்

துடுப்பாய்
பேனா

கப்பளாய்
காகிதம்

கடலாய்
சிந்தனை

வார்த்தை
கோர்த்தேன்

எழுத
தொடங்கினேன்

எழுதியது
என் துடுப்பு
துடிப்பில்லாமல்

வியந்தேன்!!

உறைத்தேன்
என் வருத்தத்தை
தோழியிடம்

உணர்ந்தேன்

மொழி இல்லாத
உணர்வுக்கு
உயிரளித்து
ஓசையெழுப்பச்
செய்வதே
கவிதையென்று!!

No comments:

Post a Comment