Monday, February 21, 2011

வாழ்க்கை

நேற்று இருந்தவன்
இன்று இல்லை
முந்நொடியில் இருந்தவன்
இந்நொடியில் இல்லை

இது கனவில்லை
நிஜம்
நம் வாழ்வின்
உண்மையான முகம்!!

ஸ்திரமில்லா வாழ்வில்..
நீயா நானா போட்டி

தடுக்கி தடுக்கி
தடுமாறும் பாதை

போதையில்லாமலே தள்ளாடும்
சிந்தனைச் சிற்பிகள்

எண்ணெயில்லாமலே பொறியும்
பொறாமைச் சொற்கள்

காலத்தை வென்றார் போல்
மன்னாதி மன்னர்கள்

சிரிப்பை தொலைத்து,
பணத்தை தேடி
காலத்தை கழித்து
நோயை கூட்டி
கணக்கில்லாமல் ஓடுகின்றோம் கணக்கில்!!

இனிமை, மென்மை, தன்மை, பொறுமை
இவைகளுக்கு வெறுமை பூசி
தனிமையில் தவிக்கின்றோம்

இனியேனும் உணர்வோம்...

புன்னகையில் குளித்தெழுந்து
ஓற்றுமையை நாம் அணிந்து
ஒவ்வொரு நொடியையும்
ரசித்து, ருசித்து, மகிழ்வோமெனில்
சொர்க்கம் நம் வாழ்வில் தான்!!

 

No comments:

Post a Comment