Tuesday, September 13, 2011

கனவு!

அடர்ந்த காட்டுக்குள்
ஆழ்ந்த இருளுக்குள்
தேடல்
ஒளிக்காக!

நிழலாய் உருவங்கள்
நிஜம் என திரையில்!

சிரிக்கின்றோம், அழுகின்றோம்
மிரளுகின்றோம், மிரட்டுகின்றோம்!

காதலில் வீழ்கின்றோம்
வீழ்ந்த காதலால் வருந்துகின்றோம்!

புதிய வரவை, புதிய உறவை
வரவேற்கின்றோம்!

உயிரின் பிரிவை, உறவின் முடிவை
பிரிந்த பின் உறவுகளின் உணர்வை உணருகின்றோம்!

வாழ்க்கையை வாழ்ந்து, வீழ்ந்து
விழிக்கின்றோம்!

திரையில் கண்டதை நினைத்து, மறந்து
தொடருகின்றோம் நிஜத்தில்!

தினம் ஓர் படம் இலவசமாய், முடிகிறது
விடியலில்!!

 

No comments:

Post a Comment