Wednesday, September 7, 2011

பயணம்!!

நிலையற்ற வாழ்க்கையை
நிலையாக்கும் கற்பனையில்
காலத்தை கடக்கும் வேகத்தில்
சறுக்குகின்றோம்!

நடக்கவில்லை, ஓடவில்லை
சறுக்குகின்றோம்!

அவ்வப்பொழுது நம்பிக்கை எனும்
உந்துதல் கொண்டு
அதிகரிக்கின்றோம்
வேகத்தை!

விதியின் பனிமலை
நம் வேகத்தால் கரைந்து
அலையாய் பின் தொடர்வதை
மறந்து, உணர்ந்தும் உணராது
சறுக்குகின்றோம்!

பனி மலையில் பயணம்
பனிப்பாறையை நோக்கி - எனிலும்
பாறையும் கரையும், மறையும்
நீராய் மாறும்!

நீரில் தொடங்கி, நீரில் முடியும்
நம் பயணத்தில்
நம் கையில் தொடக்கமும் இல்லை
முடிவும் இல்லை!

நடு நிலையில் - தடுமாறிய சறுக்கலில்
திடமான நடையை மறந்து
எதை நிலையாக்க
இந்த பயணம்??

No comments:

Post a Comment