Thursday, September 8, 2011

பேராசை!

வானை பார்த்த மரம்
பறக்கும் ஆசையுடன்
கழுத்தை நீட்ட
வெட்டினான் விறகுக்காக

விறகிலிருந்து ஒலிந்து மறைந்து
வெளியேற, உள்ளேறியது
காகித ஆலை செல்லும்
லாரியில்

காகித உற்பத்தி ஆலையில்
நொறுங்கி, உருக்குலைந்து
பொடியாகி, கலவையுடன் கலந்து
காகிதமானது

காகிதம் காத்தாடியாக
பறக்கும் நிறைவுடன்
வானில் ஆனந்தமாய்
மரத்தை ஏளனம் செய்ய...

மரங்களின் கோபத்துக்குள்ளாகி
பலத்த காற்றில்,
மரக்கிளையில் சிக்கி
உருக்குளைந்து மடிய...

காத்தாடியை உயர்த்திய பிள்ளை
மற்றொரு காத்தாடியுடன்
ஆனந்தமாய்!!

அருகே...

ஓர் மரம் நீரின்றி மடியும் வேளை
சிறு பிள்ளை அன்போடு
நீரூற்றி உயிரளித்தான்!!

No comments:

Post a Comment