Monday, August 29, 2011

நான் யார்?

நான் யார்?
என்று என்னை கேட்டேன்

வெந்நீரில் தவழ்ந்து
அவள் எச்சில் உணவை உண்டு
அவள் சுவாசத்தை சுவாசித்து
கண்ணீரில் பிறந்தேன்!
நான் யார்?
பூச்சியா? பறவையா? மிருகமா? மனிதனா?
அச்சமின்றி நான் வளர்ந்தேன்
அவள் அச்சுறுத்தலில் அஞ்சினேன்
பேதமறிந்தேன்!
நான் யார்?

பருகும் பால் அன்றி
ஆண்பால் பெண்பால் பேதமின்றி
விளையாட, அவள் பார்வையால்
பிரிவு உணர்ந்தேன்!
நான் யார்?

படர்ந்த வானில் சிறகை விரித்து,
நிலவை பிடிக்க பறக்கையில்,
திருமணக் கயிற்றில் என்னை பூட்ட,
குடும்பச் சுமை சுமக்கின்றேன்!
நான் யார்?

என் எச்சில் உணவை அவன் உண்டு
என் சுவாசத்தை சுவாசித்து
என்  தொப்புள் கொடியில் இணைந்து 
அவன் பிறக்க..

மற்றொரு பிறவி
இன்னும் ஒரு கேள்வி
நான் யார்?
அவன் யார்?

பந்தத்தில் அகப்பட்டு
பாசத்தில் பிணைந்து
காதலில்   கரைந்து
காலத்தோடு போராடி
தன்னையே மறந்தேன்!
நான் யார்?

No comments:

Post a Comment