Thursday, August 11, 2011

சுதந்திரம்

தன் உழைப்பில் கர்வம் கொண்டு
தாய் மண்ணை தெய்வம் ஆக்கி
தன் நலம் இன்றி, பிறர் நலம் கருதி
யாவறையும் குடும்பத்தினறாய் பாவித்த
இந்தியருக்குள்...

பேராசை விதைவித்து
வெளிதேசம் மோகமளித்து,
சிறிது சிறிதாய் உள்புகுந்த
புத்தீசல் அந்நியர்கள்

நிலம் கொண்டு, பணம் கொண்டு
இரட்டிப்பின் பெயரில்
போதையேற்றி, உயிர் கொண்ட நண்பர்கள்
அதற்கு தோள் கொடுத்த எட்டையர்கள்

போதையின் உச்சியில், மிதக்கின்ற அந்நிலையில்
தடுமாறிய பேதைகள்,
உருமாறி விழித்தெழுந்தார்
போராளிகளாய்!

வருங்காளம் விழித்திருக்க
சந்ததியர் தழைத்திருக்க, நம் நாடு
முன் போல் செழித்திருக்க, அவதரித்தார்
தியாகிகளாய்!

போராட்ட உச்சியில், ஒற்றுமையின் வலுமையில்
அந்நியர்கள் தெரித்தோட
ஆட்கொண்டோம் சுதந்திரத்தை
ஆகஸ்ட் 15 1947ல்

நம்மை விட்டுச்சென்ற அந்நியர்கள்
நம்மிடம் விட்டுச் சென்றார்
பேராசையை, வெளிதேச மோகத்தை
மது மாது எனும் புத்தீசல்களை...

சுதந்திரம் அடைந்தோமடி
அந்நியரின் ஆக்கத்திலிருந்து
என்று அடைவோமோ
அவர்கல் விட்டுச் சென்ற தாக்கத்திலிருந்து??

சிந்திப்போம்!!
இன்னும் ஒரு ஆகஸ்ட் 15 தேவையா???

 

No comments:

Post a Comment